sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரயில்வே ஸ்டேஷனில் ரிசர்வேஷன் கவுன்டர் வைக்க அதிகாரிகள் முடிவு   

/

ரயில்வே ஸ்டேஷனில் ரிசர்வேஷன் கவுன்டர் வைக்க அதிகாரிகள் முடிவு   

ரயில்வே ஸ்டேஷனில் ரிசர்வேஷன் கவுன்டர் வைக்க அதிகாரிகள் முடிவு   

ரயில்வே ஸ்டேஷனில் ரிசர்வேஷன் கவுன்டர் வைக்க அதிகாரிகள் முடிவு   


ADDED : செப் 09, 2025 09:40 PM

Google News

ADDED : செப் 09, 2025 09:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் ரோடு சீரமைப்பு, ரிசர்வேஷன் கவுன்டர் தனியாக திறக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் மதுரை கோட்டம் சம்மதம் தெரிவித்துள்ளதாக பயணிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

குறிப்பாக நகருக்குள் இருந்து ரயில்வே ஸ்டேஷன் வரும் இரண்டு ரோடுகளும் குண்டும் குழியுமாக, பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே அந்த ரோட்டை புதுப்பித்து தர வேண்டும்.

தற்போது இந்த ரயில்வே ஸ்டேஷனில் ஒரே கவுன்டரில், முன்பதிவில்லா டிக்கெட், முன்பதிவு டிக்கெட் வழங்கப்படுகிறது. இதனால் உரிய நேரத்தில் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து ரயில்களை பிடிக்க முடியாமல் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இதை தவிர்க்க பழைய முறைப்படி இந்த ஸ்டேஷனில், தனியாக ரிசர்வேஷன் கவுன்டர் திறக்கப்பட வேண்டும் என பயணிகள் சங்கத்தினர் மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: எங்கள் கோரிக்கையை ஏற்று, முதற்கட்டமாக கோட்ட பொறியியல் பிரிவு அதிகாரிகள், ரயில்வே ஸ்டேஷன் செல்லும் அனைத்து ரோடுகளையும் புதுப்பித்து தர டெண்டர் விட உள்ளதாக தெரிவித்தனர்.

வணிக பிரிவு மேலாளர் மீண்டும் அங்கு தனியாக ரிசர்வேஷன் கவுன்டர் அமைத்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இவ்விரு வசதிகளை முதற்கட்டமாக ரயில்வே நிர்வாகம் செய்தாலே அதிகளவில் பயணிகள் ரயிலில் பயணிக்க துவங்கி விடுவர், என்றனர்.






      Dinamalar
      Follow us