/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆன்லைனில் பண மோசடி போலீசார் விசாரணை
/
ஆன்லைனில் பண மோசடி போலீசார் விசாரணை
ADDED : ஜன 19, 2024 04:59 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் இளைஞனிடம் ஆன்லைனில் லோன் தருவதாக கூறி ரூ.20 ஆயிரம் மோசடி செய்த நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
காளையார்கோவில் அழகாபுரியை சேர்ந்தவர் 29 வயது இளைஞர்.
இவருக்கு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து லோன் தருவதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
அதை நம்பிய அந்த இளைஞர் அந்த குறுஞ்செய்தியில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அவர்கள் டாக்குமென்ட் கட்டணமாக ரூ.20 ஆயிரத்து 300 கேட்டுள்ளனர். அவர்கள் கூறிய வங்கி எண்ணிற்கு இரண்டு தவணைகளாக ரூ.20 ஆயிரத்து 300 அனுப்பியுள்ளார்.
பணத்தை பெற்று கொண்டவர்கள் லோன் தராமல் மேலும் பணம் கேட்டுள்ளனர்.
சந்தேகம் அடைந்த அந்த இளைஞர் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். சைபர் கிரைம் போலீசார் ஏமற்றியவர்களின் வங்கி எண்ணை கொண்டு விசாரிக்கின்றனர்.

