sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பழமையான கோயில் நந்தவனம் புனரமைப்பு

/

பழமையான கோயில் நந்தவனம் புனரமைப்பு

பழமையான கோயில் நந்தவனம் புனரமைப்பு

பழமையான கோயில் நந்தவனம் புனரமைப்பு


ADDED : செப் 26, 2025 02:00 AM

Google News

ADDED : செப் 26, 2025 02:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் பழமையான கோயில் நந்தவனம் மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வளாகத்தில் பழமையான நந்தவனம் உள்ளது. இந்த நந்தவனத்தில் பூக்கும் மலர்களால் சாமிக்கு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி காணப்பட்டது. தற்போது இந்த நந்தவனம் மீட்டெடுக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது. மு.சி.அ.சேவுகப்பெருமாள் ஆண்டார் அறக்கட்டளை சார்பில் நந்தவனம் புனரமைக்கப்பட்டுள்ளது.

இதில் மகாவில்வம், ருத்ராட்சம், நாகலிங்கம், செங்காலி, வன்னி போன்ற மரங்களும், செண்பகம், பாரிஜாதம், பவளமல்லி, மந்தாரை, மனோரஞ்சிதம் உள்ளிட்ட வாசனை மலர்கள் என 240 கன்றுகள் நடப்பட்டது.

விழாவில் திருப்பணிக்குழு தலைவர் ராம.அருணகிரி, பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, கோயில் கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் மற்றும் கிராமத்தினர் பங்கேற்றனர்.

முன்னதாக கோயிலில் இருந்து தெய்வீக மூலிகை செடிகள் பூக்கன்றுகளை கிராமத்தினர் ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெயந்தன் லட்சுமிபிரியா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us
      Arattai