நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் மத்திய அரசின் துாய்மை பணி சிறப்பு திட்டத்தின் கீழ் தபால் ஊழியர்கள் வாரச்சந்தை ரோட்டில் துாய்மை பணியில் ஈடுபட்டனர். தபால் துறை கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் தலைமை வகித்தார்.
நகராட்சி தலைவர் துரை ஆனந்த் துவக்கி வைத்தார். தபால் துறை ஊழியர்கள், அலுவலர்கள் வாரச்சந்தை ரோடு முழுவதும் துாய்மை பணி மேற்கொண்டனர்.