sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விதிகளுக்கு புறம்பாக பணி மாறுதல் ஆசிரியர் கூட்டணி கண்டனம்

/

விதிகளுக்கு புறம்பாக பணி மாறுதல் ஆசிரியர் கூட்டணி கண்டனம்

விதிகளுக்கு புறம்பாக பணி மாறுதல் ஆசிரியர் கூட்டணி கண்டனம்

விதிகளுக்கு புறம்பாக பணி மாறுதல் ஆசிரியர் கூட்டணி கண்டனம்


ADDED : ஜூன் 14, 2025 11:39 PM

Google News

ADDED : ஜூன் 14, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : தமிழகத்தில் காலிப்பணியிடங்களில் அரசியல் அழுத்தம காரணமாக விதிகளுக்கு புறம்பாக பணி மாறுதல் வழங்கியதற்கு ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் புரட்சித் தம்பி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் தற்போதுள்ள காலிப்பணியிடங்களில் அரசியல் அழுத்தம் என்று கூறி எம் லிஸ்ட் பெயரில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பொது மாறுதல் கலந்தாய்விற்கு புறம்பாக மாறுதல் அளிப்பதை கண்டித்தும், தொடக்கக்கல்வி துறையில் 12 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் இல்லாததை கண்டித்தும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி சில ஆண்டுகளாக பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.

ஆசிரியர் நியமனம் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். கடந்த கல்வி ஆண்டின் இறுதியில் மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமையாசியர் பதவி காலியாக உள்ளது.

இதனால் பள்ளிகளை நிர்வகிப்பது சவாலான விஷயமாக உள்ளது. தொகுப்பூதிய மதிப்பூதிய நியமனங்களை ரத்து செய்ய வேண்டும்.

சமூக நலத்துறை மூலம் மகளிர் சுய உதவிக் குழு மூலம் தற்போது பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட விலையில்லா சீருடைகள் குறைவான எண்ணிக்கையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த குறையை நிவர்த்தி செய்து மீண்டும் வழங்க வேண்டும்.

தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விதிகளுக்கு புறம்பாக அரசாணைகளுக்கு முரணாக தர ஊதியம் ரூ.5400 உள்ளிட்டவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தணிக்கை தடைகளால் ஆசிரியர்கள் ஓய்வூதியப் பலன்களை பெற முடியாமல் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

தொடக்கக்கல்வி இயக்குநர் உள்ளிட்ட உயர் அலுவலர்களை சந்தித்து கோரிக்கை வைப்பது எனவும் கோரிக்கைகள் தீர்க்கப்படாத சூழலில் போராட்டத்தில் ஈடுபட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us