நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப் பள்ளியில் திருவள்ளுவர் தின விழா தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமையில் நடந்தது. ஆசிரியை ரேவதி வரவேற்றார்.
ஒன்று முதல் 8 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் வீரசின்னம்மாள், பாண்டியரசி, முத்துலட்சுமி, ஆரோக்கியமேரி, சித்ரா, சாஸ்தா சுந்தரம், அசோக்குமார் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

