sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் போக்குவரத்து நெரிசல்

/

சிவகங்கையில் போக்குவரத்து நெரிசல்

சிவகங்கையில் போக்குவரத்து நெரிசல்

சிவகங்கையில் போக்குவரத்து நெரிசல்


ADDED : ஜன 23, 2024 04:39 AM

Google News

ADDED : ஜன 23, 2024 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை நகரில் பஸ் ஸ்டாண்ட் பின்புறம்,அரண்மனை வாசல், நேருபஜார் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் பின்புறம் கலெக்டர் அலுவலகம் செல்லக்கூடிய ரோடு எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. குறிப்பாக சுப முகூர்த்த நேரங்களில் உழவர்சந்தை பகுதி ரோட்டோரங்களில் வாகனங்களை நிறுத்து வைக்கின்றனர்.

அதேபோல் நேருபஜார் பகுதியிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகரில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக அவசரத்திற்கு மருத்துவக் கல்லுாரி செல்வதற்கு நேருபஜார் ரோட்டை தான்பயன்படுத்துகின்றனர். ஆனால் நேருபஜாரில் சுபமுகூர்த்த காலங்களில் டூவீலரில் செல்வதே மிகவும் சிரமமாக உள்ளது.

அதேபோல் அரண்மனை ரோட்டில் நடுரோட்டில் வாகனங்களை நிறுத்துகின்றனர். டூவீலர்கள் மட்டுமின்றி கார், சரக்கு வாகனங்களும் நிற்கின்றனர். விளம்பர பேனர்களும் ரோட்டில் நடுவில் டிவைடரில் பாதையை மறைத்து வைக்கின்றனர். இதனால் அவ்வழியாக வாகனங்களில் செல்லும்போது நெரிசல் ஏற்படுகிறது.

விதியை மீறி ரோட்டில் நடுவில் பேனர் வைப்போர் மீதும் வாகனங்கள் நிறுத்துவோர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுபமுகூர்த்த காலங்களில் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் கலெக்டர் அலுவலகம் செல்லக்கூடிய ரோடு, நேரு பஜார்,அரண்மனை வாசல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்தை கண்காணிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us