/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டாஸ்மாக் பணியாளர்கள் 9 பேர் சென்னைக்கு மாற்றம்
/
டாஸ்மாக் பணியாளர்கள் 9 பேர் சென்னைக்கு மாற்றம்
ADDED : ஜன 14, 2024 03:46 AM
தேனி, : தேனி டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த 9 பேர் லஞ்ச ஒழிப்புத்துறை அறிவுறுத்தலில் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தேனி மண்டல டாஸ்மாக் மேலாளர் அலுவலகம், கோடவுன் கருவேல் நாயக்கன்பட்டியில் உள்ளது. இங்கு 2023 நவ., ல் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி, சுந்தரராஜ், இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஏழு மணிநேர சோதனையில் கணக்கில் வராத ரூ.27,400, சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரக அறிவுறுத்தலின் பேரில் தேனி டாஸ்மாக் அலுவலகத்தில் பணிபுரிந்த இந்திரன், சுரேஸ்குமார், நாகராஜன், செங்கிஸ்கான், சுதாகர், முருகன், கார்த்திகேயன், செல்வகுமார், பாஸ்கரன் ஆகிய 9 பேர் சென்னை அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்து பொதுமேலாளர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.

