sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பைபாஸ் ரோடுகளில் கேமராக்கள் அமைக்க நடவடிக்கை தேவை

/

பைபாஸ் ரோடுகளில் கேமராக்கள் அமைக்க நடவடிக்கை தேவை

பைபாஸ் ரோடுகளில் கேமராக்கள் அமைக்க நடவடிக்கை தேவை

பைபாஸ் ரோடுகளில் கேமராக்கள் அமைக்க நடவடிக்கை தேவை


ADDED : செப் 26, 2025 02:19 AM

Google News

ADDED : செப் 26, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : பைபாஸ் ரோடுகளில் சிசிடிவி கேமராக்கள் பொருந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

திண்டுக்கல் முதல் கொட்டாரக்கரா (கேரளா) வரை தேசிய நெடுஞ்சாலை எண் 183 ன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதில் நான்கு வழிச்சாலை என திட்டமிடப்பட்டு, பின் இரு வழி சாலையாக மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் நான்குவழிச்சாலை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

வத்தலக்குண்டு, தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய ஊர்களில் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறை கையகப்படுத்தி சாலைகள் மேம்படுத்தப்பட்ட பின்பு, திண்டுக்கல் தேனி மாவட்டங்களில் விபத்து அதிகரித்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.

இதற்கு காரணம் வாகனங்களை மிக அதிக வேகத்தில் இயக்குவது என கண்டறியப்பட்டுள்ளது. எனவே முதற்கட்டமாக பைபாஸ் ரோடுகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி, வாகனங்களின் வேகம் கண்காணித்து விதிமீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கேரளா தேசிய நெடுஞ்சாலைகளில் கேமரா பொருத்தி, வாகனங்களை கண்காணிக்கும் பணிகள் சிறப்பாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் குறிப்பாக திண்டுக்கல் -- குமுளி நெடுஞ்சாலையில் கேமராக்கள் இல்லை. எனவே விபத்துக்களை குறைக்க கேமராக்கள்பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலீஸ் மற்றும் வட்டார போக்குவரத்து துறைகளுடன் இந்த கேமராக்களை இணைக்க வேண்டும். அப்போது தான் கண்காணிப்பு மற்றும் அபராதம் விதிக்க ஏதுவாக இருக்கும்.






      Dinamalar
      Follow us
      Arattai