sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பிரசவிக்க துவங்கிய வரையாடுகள் இரவிகுளம் பூங்கா பிப்.,1ல் மூட வாய்ப்பு

/

பிரசவிக்க துவங்கிய வரையாடுகள் இரவிகுளம் பூங்கா பிப்.,1ல் மூட வாய்ப்பு

பிரசவிக்க துவங்கிய வரையாடுகள் இரவிகுளம் பூங்கா பிப்.,1ல் மூட வாய்ப்பு

பிரசவிக்க துவங்கிய வரையாடுகள் இரவிகுளம் பூங்கா பிப்.,1ல் மூட வாய்ப்பு


ADDED : ஜன 21, 2024 05:20 AM

Google News

ADDED : ஜன 21, 2024 05:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவில் வரையாடுள் பிரசவிக்க துவங்கியதால் பிப்., ஒன்றில் பூங்கா அடைக்க வாய்ப்புள்ளது.

அங்கு அபூர்வ இன வரையாடு ஏராளம் உள்ளன. அவற்றை பார்க்க பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு சுற்றுலா பயணிகளை கடும் கட்டுப்பாடுகளுடன் வனத்துறையினர் அனுமதிக்கின்றனர்.

ஆண்டு தோறும் தென்மேற்கு பருவ மழை துவங்கியதும் ஜூன், ஜூலையில் மேக மூட்டத்துடன் பெய்யும் சாரல் மழையின்போது வரையாடுகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.

அவற்றின் பிரவச காலம் பிப்., துவங்கி மார்ச் இறுதி வரை நீடிக்கும். அப்போது ராஜமலைக்கு பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்படும்.

வரையாடுகளின் பிரசவம் துவங்கும் முன்பு ஜனவரியில் வனக்காவலர்கள் அவற்றை கண்காணிப்பது வழக்கம்.

அவ்வாறு கண்காணிக்கப்பட்டதில் தற்போது பத்துக்கும் மேற்பட்ட குட்டிகள் பிறந்ததாக தெரியவந்தது. புதிதாக பிறந்த குட்டிகள் ராஜமலையில் தாயுடன் வலம் வருகின்றன.அவற்றை பயணிகள் ஆர்வமுடன் கண்டு வருகின்றனர்.

வரையாடுகளின் பிரசவம் துவங்கியதால் வழக்கம் போல் பிப்., ஒன்றில் பூங்கா அடைக்க வாய்ப்புள்ளது.

கடந்தாண்டு இரவிகுளம் தேசிய பூங்காவில் புதிதாக பிறந்த 128 குட்டிகள் உள்பட 803 வரையாடுகள் உள்ளதாக

வனத்துறை நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us