sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இருதரப்பு மோதல்: போலீசார் குவிப்பு

/

இருதரப்பு மோதல்: போலீசார் குவிப்பு

இருதரப்பு மோதல்: போலீசார் குவிப்பு

இருதரப்பு மோதல்: போலீசார் குவிப்பு


ADDED : ஜன 19, 2024 05:51 AM

Google News

ADDED : ஜன 19, 2024 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி அருகே சுக்குவாடன்பட்டியில் நடந்த இருதரப்பு தகராறில் மோதலை தவிர்க்க 3 இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

சுக்குவாடன்பட்டி வடக்குத்தெரு லோகேஸ்வரன் 20. இவர் தனது கன்றுக்குட்டி காணாமல் போனதால் அதனை தேடி ஜனவரி 17 ல் இந்திரா காலனியில் தேடிச் சென்றார்.

அங்கு இருந்த ராஜதுரை, அலெக்ஸ், காளிமுத்து, மங்காண்டி, முருகேசன், வைரமுத்து, மாரியப்பன், அஜீத், வீரன், தீபக், பாலா மற்றும் சிலர், எங்கள் பகுதியில் கன்றுக்குட்டியை ஏன் தேடி வந்தாய் என திட்டி தாக்கினர்.

இதில் மாரியப்பன் இரும்பு கம்பியை எடுத்து லோகேஸ்வரன் தலையில் தாக்கி காயப்படுத்தி, டூவீலரை சேதப்படுத்தினார். லோகேஸ்வரன் தேனி மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சையில் உள்ளார். புகாரில் அல்லிநகரம் போலீசார் சுக்குவாடன்பட்டியை சேர்ந்த ராஜதுரை, அலெக்ஸ், காளிமுத்து, மங்காண்டி, முருகேசன், வைரமுத்து, மாரியப்பன், அஜீத், வீரன், தீபக், பாலா உட்பட பலர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட லோகேஸ்வரன் தரப்பினர், எதிரிகளை கைது செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட முயற்சித்தனர். அதற்கு முன் ஏ.டி.எஸ்.பி.,சுகுமாறன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இப் பிரச்னையால் பதட்டம் நிலவுவதால் சுக்குவாடன்பட்டியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us