/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முன்விரோத தகராறு நால்வர் மீது வழக்கு
/
முன்விரோத தகராறு நால்வர் மீது வழக்கு
ADDED : செப் 17, 2025 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : அல்லிநகரம் அம்பேத்கர் வடக்கு தெரு கொத்தனார் முத்துபாண்டி 30. இவர் செப்.13ல் தனது நண்பரின் மகன் அருண்குமாருடன் மதுகுடித்து விட்டு நடுத்தெருவில் பேசிக்கொண்டிருந்தனர்.
அங்கு சென்ற இதே பகுதியை சேர்ந்த விஷ்வா, சேது, மணிராஜ், சிங்கராஜ் ஆகிய நால்வரும் இணைந்து முன்விரோதம் காரணமாக முத்துப்பாண்டியை தாக்கினர்.
இதில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

