/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வடமலை நாச்சியம்மன் கோயிலுக்கு ரோடு வசதி இன்றி பக்தர்கள் சிரமம்
/
வடமலை நாச்சியம்மன் கோயிலுக்கு ரோடு வசதி இன்றி பக்தர்கள் சிரமம்
வடமலை நாச்சியம்மன் கோயிலுக்கு ரோடு வசதி இன்றி பக்தர்கள் சிரமம்
வடமலை நாச்சியம்மன் கோயிலுக்கு ரோடு வசதி இன்றி பக்தர்கள் சிரமம்
ADDED : செப் 18, 2025 06:36 AM

போடி : போடி அருகே வடமலைநாச்சியம்மன் கோயிலுக்கு செல்ல ரோடு வசதி இன்றி பக்தர்கள் சிரமம் அடைகின்றனர்.
போடி ஒன்றியம், அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் வடமலைநாச்சியம்மன் கோயில் உள்ளது. 650 ஆண்டுகளுக்கு முன்பு கண் கொடுத்த ராசு நாயக்கர் என்பவர் காலத்தில் இக்கோயில் உருவானது.
போடியில் இருந்து ஏழு கி.மீ., தூரம் ரோடு வசதியும், இரண்டு கி.மீ., தூரம் ரோடு இன்றி மலைப் பாதையில் நடந்து செல்ல வேண்டும். இக்கோயிலில் வாரம் தோறும் வெள்ளி, மாதம் தோறும் பவுர்ணமி பூஜைகள் நடப்பது வழக்கம். முன்பு பாதை வசதி இல்லாமல் இருந்தது.
தற்போது வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வருகை அதிகரித்தது. இதனால் கோயில் நிர்வாகம், விவசாயிகள் இணைந்து பாதையின் இருபுறமும் ஆக்கிரமிப்பில் இருந்த செடிகள் அகற்றி, இரண்டு கி.மீ., தூரம் ரோடுக்கான பாதை வசதி ஏற்படுத்தினர்.
தற்போது ரோடு வசதி இன்றி குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் பக்தர்கள் கோயிலுக்கு நடந்து செல்லவும், அப்பகுதி விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
பக்தர்கள், விவசாயிகள் பயன் பெறும் வகையில் வடமலைநாச்சியம்மன் கோயிலுக்கு செல்ல ரோடு வசதி அமைத்து தர போடி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

