ADDED : ஜன 19, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் ஜன.,26 காலை 11:00 மணிக்கு ஊராட்சித்தலைவர்களால் கிராம சபை நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம், பொது நிதிசெலவினம், தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பற்றி விவாதம், மக்கள் திட்டமிடல் இயக்கம், 2024 -2025 நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித்திட்டம், ஜல்ஜீவன் இயக்கம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி விவாதங்கள் நடைபெற உள்ளது.
ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று சிறப்பிக்க கலெக்டர் ஷஜீவனா வலியுறுத்தி உள்ளார்.

