/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மகளிர் குழுக்களுக்கு ரூ.64.74 கோடி கடனுதவி
/
மகளிர் குழுக்களுக்கு ரூ.64.74 கோடி கடனுதவி
ADDED : செப் 17, 2025 08:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தமிழக துணைமுதல்வர் உதயநிதி சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சயில் மாவட்டத்தை சேர்ந்த 820 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ. 64.74 கோடி கடனுதவியை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் வழங்கினார். விழாவில் தங்கதமிழ்செல்வன் எம்.பி., சரவணக்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர்கள் ரேணுபிரியா, சுமிதா, ராஜராஜேஸ்வரி, மகளிர்திட்ட இயக்குநர் சந்திரா, கூட்டுறவு இணைப்பதிவாளர் நர்மதா, முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

