sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெரியகுளம் மனநல சிகிச்சை மையம் தேனி ஆராய்ச்சி மையத்திற்கு மாற்றம் கட்டடங்கள் சீரமைப்புப் பணி தீவிரம்

/

பெரியகுளம் மனநல சிகிச்சை மையம் தேனி ஆராய்ச்சி மையத்திற்கு மாற்றம் கட்டடங்கள் சீரமைப்புப் பணி தீவிரம்

பெரியகுளம் மனநல சிகிச்சை மையம் தேனி ஆராய்ச்சி மையத்திற்கு மாற்றம் கட்டடங்கள் சீரமைப்புப் பணி தீவிரம்

பெரியகுளம் மனநல சிகிச்சை மையம் தேனி ஆராய்ச்சி மையத்திற்கு மாற்றம் கட்டடங்கள் சீரமைப்புப் பணி தீவிரம்


ADDED : செப் 21, 2025 12:30 AM

Google News

ADDED : செப் 21, 2025 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நகராட்சி கட்டடத்தில் இயங்கி வந்த மாவட்ட மனநல அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் தேனிமருத்துவக்கல்லுாரி கட்டுப்பாட்டில் இயங்கும் தேனி மனநல ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையத்திற்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.

பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் 2018 ல் மனநல அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் துவங்கப்பட்டது.

இங்கு இயங்கி வந்த மையத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு 50 பேர் சிகிச்சை பெறும் வசதிகள் உள்ளன. தற்போது 42 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் மனநல அவசர சிகிச்சை மையத்தை தேனி மனநல மருத்துவ ஆராய்ச்சி மற்றும்சிகிச்சை மையத்திற்கு மாற்றிஅரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக தேனி சமதர்மபுரத்தில் உள்ள மனநல ஆராய்ச்சி மையத்தில் பின்புறம் உள்ள 4 கட்டடங்களை அவசர சிகிச்சை பிரிவுக்காக மருத்துவக்கல்லுாரி முதல்வர் முத்துச்சித்ரா ஒதுக்கியுள்ளார். அங்கு மனநலஅவசர சிகிச்சைக்கான ஆண்கள், பெண்கள் வார்டு, அவசர சிகிச்சை பிரிவு, ஸ்டோர் ரூம் ஆகியவை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மனநல டாக்டர்கள் கூறுகையில், ''கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்தபடியாக தேனியில் மாநிலத்தில் 2வது மனநல மருத்துவ ஆராய்ச்சி மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிகிச்சை முறைகள், கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் கிடைக்கும். பெரியகுளத்தில் இடநெருக்கடி, வசதி குறைபாடுகள்இருந்தாலும் சிறப்பாக சிகிச்சை அளித்தோம்.

தேனியில் துவங்கப்படும் போது கூடுதல் படுக்கை வசதிகள் கிடைக்கும். தரமான சிகிச்சைவழங்க முடியும். விரைவில் பெரியகுளத்தில் சிகிச்சை பெறும் மனநலம் பாதிக்கப்பட்டோர் தேனிக்கு மாற்றி, சிகிச்சை அளிக்கும் பணிகள் துவங்கும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us