ADDED : ஜன 10, 2024 12:46 AM

போடி : போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர்.
போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழச்சொக்கநாதர் கோயில், மேலச் சொக்கநாதர் கோயில், திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
பெரியகுளம்:கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு கைலாசநாதர்,பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுவினர்கள் செய்திருந்தனர்.
பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு அதிகார நாகராஜருக்கும், நந்தி பகவானுக்கும், பால், தயிர், சந்தனம், மஞ்சள், பன்னீர் உட்பட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
மல்லிகைப்பூ, தாமரைப் பூ, ரோஜாப்பூ, பிச்சிப்பூக்களை கொண்டு அதிகாரநந்தீஸ்வரர், அதிகார நாகராஜருக்கும், சிவனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை டாக்டர் மகாஸ்ரீ ராஜன் செய்திருந்தார். பெரியகுளம்
பாலசுப்பிரமணியர் கோயில், ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷம் பூஜை நடந்தது.

