/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சின்னமனுாரில் துணை மின்நிலையம் அமைப்பதில் மெத்தனம்
/
சின்னமனுாரில் துணை மின்நிலையம் அமைப்பதில் மெத்தனம்
சின்னமனுாரில் துணை மின்நிலையம் அமைப்பதில் மெத்தனம்
சின்னமனுாரில் துணை மின்நிலையம் அமைப்பதில் மெத்தனம்
ADDED : ஜன 19, 2024 05:55 AM
கம்பம்: சின்னமனூர் துணை மின் நிலையம் அமைக்கும் பணி மின்வாரியத்தின் மெத்தனப்போக்கால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சீரான மின் வினியோகம், வழித்தட மின் இழப்பை குறைக்கவும் துணை மின்நிலையங்கள் அமைக்கப் படுகிறது.மாவட்டத்தில் வண்ணாத்திபாறை, கம்பம், உத்தமபாளையம், மார்க்கையன்கோட்டை, தேவாரம், ராசிங்காபுரம், சின்ன ஒவுலாபுரம், காமாட்சிபுரம், தேனி, மதுராபுரி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட 20 க்கும் - மேற்பட்ட துணை மின்நிலையங்கள் உள்ளன.
இதில் நகராட்சிகளில் சின்னமனூரில் மட்டும் நீண்ட காலமாக துணை மின்நிலையம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இங்கு மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகம் உள்ளது . சமீபத்தில் துணை மின்நிலையம் அமைக்க இடம் தேடும் பணிகள் துவங்கியது. வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்தார்கள்.
இடத்தை தேர்வு செய்தும், தேவையில்லாத சர்ச்சைகளை சிலர் ஏற்படுத்துவதாக தெரிகிறது. இடத்தை மின்வாரியம் கையகப்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் சின்னமனூரில் துணை மின் நிலையம் அமைவது கானல் நீராக போய்விடும். இதேபோல காமயகவுண்டன்பட்டியில் துணை மின்நிலையம் அமைக்க அரசு அனுமதி வழங்கி பல ஆண்டுகளை கடந்து விட்டது. இடமும் தேர்வாகி பிரச்னை இல்லை. மின்வாரியம் என்ன காரணத்தாலோ பணிகளை துவங்காமல் அமைதி காக்கிறது. சின்னமனூர் மற்றும் காமயகவுண்டன்பட்டியில் துணை மின்நிலையங்கள் அமைக்க அரசு மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

