sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரூ.98 லட்சம் செலவில் ரோடு அமைக்கும் பணி தீவிரம்

/

ரூ.98 லட்சம் செலவில் ரோடு அமைக்கும் பணி தீவிரம்

ரூ.98 லட்சம் செலவில் ரோடு அமைக்கும் பணி தீவிரம்

ரூ.98 லட்சம் செலவில் ரோடு அமைக்கும் பணி தீவிரம்


ADDED : அக் 24, 2025 02:47 AM

Google News

ADDED : அக் 24, 2025 02:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: தினமலர் நாளிதழின் செய்தி எதிரொலியால் நபார்டு திட்டத்தின் கீழ் சில்லமரத்துப்பட்டி - பெருமாள் கவுண்டன்பட்டி விலக்கு வரை புதிதாக ரோடு அமைக்கும் பணி தீவிரமாக நடந்த வருகிறது.

போடி அருகே சில்லமரத்துப் பட்டியில் இருந்து பெருமாள் கவுண்டன் பட்டி விலக்கு வரை ரோடு அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. டூவீலர் கூட செல்ல முடியாத அளவிற்கு கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக இருந்தன. பெருமாள் கவுண்டன்பட்டி சில்லமரத்துப்பட்டிக்கு பஸ் வசதி இல்லை. இதனால் சேதம் அடைந்த ரோட்டில் மாணவர்கள் சைக்கிளில் பள்ளிக்கு சென்று வரவும், மக்கள் மருத்துவ வசதி பெறவும், விளை பொருட்களை கொண்டு வர விவசாயிகள் சிரமம் அடைந்தனர். வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது. இதன் எதிரொலியால் சில்லமரத்துப்பட்டி - பெருமாள் கவுண்டன் பட்டி விலக்கு வரை 2.4 கி.மீ., ரோடு நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.98 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us