நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பாக பயிற்சி பட்டறை வகுப்பு நடந்தது.
மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி செயலாளர் காசிபிரபு, இணைச்செயலாளர்கள் செண்பகராஜன், அருண், கல்லுாரி முதல்வர் சித்ரா, துணை முதல்வர்கள் கோமதி, சுசீலா, உமாகாந்தி, கிருஷ்ணவேணி பேசினர். சென்னை எஸ்.ஐ.வி.இ.டி., கல்லுாரி உதவி பேராசிரியர் சுகன்யாதேவி பேசினார். உதவி பேராசிரியர் பானு நன்றி கூறினார்.

