ADDED : பிப் 02, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:சுரண்டை அருகே லாரியில் ரகசிய அறை அமைத்து ரூ. 5 லட்சம் மதிப்பு குட்கா கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே பரங்குன்றாபுரத்தில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியே வந்த ஒரு மினி லாரியில் மளிகை பொருட்கள், அட்டைப்பெட்டிகள் இருந்தன.
போலீசார் சந்தேகத்தின் பேரில் லாரியின் பின்பக்கத்தில் சோதனையிட்டபோது, அதன் உள்ளே மினி அறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மூடை மூடையாக குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தனர்.
இது தொடர்பாக லாரி டிரைவர் கார்த்திக், உரிமையாளர் இளங்கோவன் ஆகியோரை போலீசார்கைது செய்து சிறையில் அடைத்தனர். ரூ. 5 லட்சம் மதிப்பிலான குட்கா மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேல்விசாரணை நடக்கிறது.

