ADDED : ஜன 19, 2024 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தை சேர்ந்தவர் எட்வர்ட், 80, மனைவி சவுந்தரவல்லி, 74. இவர்களுக்கு நான்கு மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர்.
அனைவருக்கும் திருமணமாகி பேரன், பேத்திகள் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எட்வர்டுக்கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது; தனித்தனியாக வசித்தனர்.
சில நாட்களுக்கு முன் மகள்கள், தங்கள் பெற்றோரை சமாதானப்படுத்தி ஒரே வீட்டில் தங்க வைத்தனர். நேற்று காலையில் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில், எட்வர்ட் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின், வீட்டில் அவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

