sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மூதாட்டியிடம் 3 சவரன் திருட்டு

/

மூதாட்டியிடம் 3 சவரன் திருட்டு

மூதாட்டியிடம் 3 சவரன் திருட்டு

மூதாட்டியிடம் 3 சவரன் திருட்டு


ADDED : மார் 27, 2025 08:40 PM

Google News

ADDED : மார் 27, 2025 08:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி சித்துார் சாலையை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி சம்பூர்ணம், 66. இவர், சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்தார். 2019ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.

நேற்று முன்தினம் மாலை, சம்பூர்ணம் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு, ஓய்வூதியம் பெறுவதற்கான, வாழ்நாள் சான்று கொடுக்க வந்தார். பின், வீட்டிற்கு திருத்தணி- அரக்கோணம் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, 40 வயது மதிக்க ஆண் ஒருவர், சம்பூர்ணத்திடம், 'இந்த இடத்தில் திருடர்கள் அதிக நடமாட்டம் இருப்பதால், 'நீங்கள் கையில் போட்டுள்ள வளையல்களை கழற்றி கொடுங்கள், நான் பத்திரமாக ஒரு காகிதத்தில் மடித்து உங்கள் கைப்பையில் வைக்கிறேன்' எனக் கூறினார்.

மூன்று சவரன் வளையல்களை சம்பூர்ணம் கழற்றி கொடுக்க, அந்த மர்ம நபர் வெறும் பேப்பரை மட்டும் மடித்து கைப்பையில் வைத்து விட்டு பத்திரமாக செல்லுங்கள் என அனுப்பினார். வீட்டிற்கு சென்ற பின் சம்பூர்ணம் கைப்பையை திறந்து பார்த்த போது, வெறும் காகிதம் மட்டுமே இருந்தது.

இது குறித்து சம்பூர்ணம் கொடுத்த புகாரின்படி திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us