/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
31ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
/
31ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
ADDED : ஜன 24, 2024 12:52 AM
திருவள்ளூர்:திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், 31ல் நடைபெற உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுர் மாவட்ட அளவிலான, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில், வரும், 31 காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
கூட்டத்தில் வே ளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மை பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு உள்ளிட்ட வேளாண் துறை சார்ந்த, மாவட்ட அளவிலான தலைமை அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
எனவே, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், கூட்டத்தில் பங்கேற்று, வேளாண் குறைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

