/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையா... மேய்ச்சல் நிலமா? கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி
/
நெடுஞ்சாலையா... மேய்ச்சல் நிலமா? கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி
நெடுஞ்சாலையா... மேய்ச்சல் நிலமா? கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி
நெடுஞ்சாலையா... மேய்ச்சல் நிலமா? கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜன 18, 2024 09:56 PM

கடம்பத்துார்:திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுமாவிலங்கை ஊராட்சி. இந்த நெடுஞ்சாலை வழியே, தினமும் 1,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதியினர் வளர்க்கும் கால்நடைகள், பகல் நேரங்களில் நெடுஞ்சாலையில் சுற்றித்திரிகின்றன. மேலும், குப்பையை உட்கொண்டு இளைப்பாறும் மேய்ச்சல் நிலம் போல் இச்சாலை மாறியுள்ளது.
இதனால், வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சில நேரங்களில், நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். கலெக்டர் மற்றும் எஸ்.பி., உத்தரவிட்டும் நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகள் குறித்து அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காதது, வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

