/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீடியனில் குப்பை குவியல் பொலிவு இழக்கும் சாலை
/
மீடியனில் குப்பை குவியல் பொலிவு இழக்கும் சாலை
ADDED : ஜூன் 25, 2025 03:04 AM

கும்மிடிப்பூண்டி:தேசிய நெடுஞ்சாலை மீடியனில் குவிக்கப்பட்டு வரும் குப்பை கழிவுகளால் சாலை பொலிவு இழந்து, சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஊராட்சியில், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, மகாலிங்க நகர் அமைந்துள்ளது. இங்கு, 80க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
ஊராட்சி நிர்வாகம், இப்பகுதியில் குப்பை கழிவுகளை முறையாக சேகரித்து அப்புறப்படுத்துவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இப்பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகள், தேசிய நெடுஞ்சாலை மீடியனில் குவிக்கப்படுகின்றன.
நாள் கணக்கில் குப்பை அகற்றப்படாமல் இருப்பதால், தேசிய நெடுஞ்சாலை பொலிவு இழந்து காணப்படுவதுடன், சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் குப்பை குவிப்பதை தவிர்க்க, மகாலிங்க நகரில் முறையாக குப்பையை சேகரிக்க வேண்டும்.
இதற்கு, எளாவூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.