/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீன் வளர்க்க மானிய கடன் விண்ணப்பங்கள் வரவேற்பு
/
மீன் வளர்க்க மானிய கடன் விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜன 13, 2024 09:27 PM
திருவள்ளூர்:மீன்வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மீன்வள உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தோடு தொழில்முனைவோர்களை தமிழக அரசு ஊக்குவித்தி வருகிறது.
இதில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 20 டன் கொள்ளளவு உள்ள குளிர்ப்பதன சேமிப்பு கிடங்கு அமைத்தல் திட்டத்திற்கான நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்த பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டு திட்டத்திற்கு மீனவ விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அதன்படி 20 டன் கொள்ளளவு உள்ள குளிர்ப்பதன சேமிப்பு கிடங்கு அமைக்க ஆகும் செலவினத்தொகை 80 லட்சம் ரூபாயில் பொது பயனாளிக்கு 40 விழுக்காடு 32 லட்சம் ரூபாய் மற்றும் மகளிர் பயனாளிக்கு 60 விழுக்காடு 48 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் உதவி இயக்குனர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, திருவள்ளூர், பொன்னேரி அலுவலகம்,வேண்பாக்கம், அலுவலக முகவரியிலும் 044-27972457 என்ற தொலைபேசி எண்ணிலும் 93848 24246 என்ற மொபைல் போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

