sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பழுதான குடிநீர் தொட்டி அகற்றப்படுமா? பொன்னாங்குளம் பகுதிவாசிகள் அச்சம்

/

பழுதான குடிநீர் தொட்டி அகற்றப்படுமா? பொன்னாங்குளம் பகுதிவாசிகள் அச்சம்

பழுதான குடிநீர் தொட்டி அகற்றப்படுமா? பொன்னாங்குளம் பகுதிவாசிகள் அச்சம்

பழுதான குடிநீர் தொட்டி அகற்றப்படுமா? பொன்னாங்குளம் பகுதிவாசிகள் அச்சம்


ADDED : ஜன 24, 2024 12:45 AM

Google News

ADDED : ஜன 24, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணவூர்:திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் அடுத்து அமைந்துள்ளது பொன்னாங்குளம் கிராமம். இங்கு 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதிவாசிகள், பயன்பாட்டிற்காக மணவூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து, பயன்பாடின்றி உள்ளது.

இதன் நான்கு துாண்களும், விரிசல் அடைந்து, மோசமான நிலையில் உள்ளது. மேலும், குடிநீர் தொட்டியின் மேற்புறமும் மிகவும் பழுதடைந்துள்ளது.

குடிநீர் தொட்டியின் வெளிப்புறத்தில் இருந்து சிமெண்ட் பூச்சுகள் அவ்வப்போது உதிர்ந்து வருகிறது.

இத்தகைய ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குறித்து, பலமுறை ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us