/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
படிக்கட்டில் தவறி விழுந்து நடத்துனர் காயம்
/
படிக்கட்டில் தவறி விழுந்து நடத்துனர் காயம்
ADDED : ஜன 13, 2024 09:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி:காஞ்சிபுரம் அடுத்த ஓச்சேரியைச் சேர்ந்தவர் கணபதி, 28. தனியார் பேருந்து நடத்துனர். இவர், நேற்று காலை பேருந்தில் நின்றபடி, கோயம்பேடில் இருந்து திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை செல்லும் போது, படிக்கட்டில் இருந்து கணபதி தவறி விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். பயணியர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

