sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் தொடர் மழையால் சாய்ந்தன விவசாயிகள் கவலை

/

அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் தொடர் மழையால் சாய்ந்தன விவசாயிகள் கவலை

அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் தொடர் மழையால் சாய்ந்தன விவசாயிகள் கவலை

அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் தொடர் மழையால் சாய்ந்தன விவசாயிகள் கவலை


ADDED : செப் 21, 2025 01:59 AM

Google News

ADDED : செப் 21, 2025 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி தாலுகாவில் பெரியகடம்பூர், கன்னிகாபுரம், என்.என்.கண்டிகை, கிருஷ்ணசமுத்திரம், நெமிலி, கே.ஜி.கண்டிகை, மத்துார் உட்பட 25க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், 1,200 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

தற்போது, நெற்பயிர் அறுவடைக்கு தயாரான நிலையில், ஒரு வாரமாக பலத்த மழையுடன் காற்று வீசுவதால், நெற்கதிர்கள் தரையில் சாய்ந்துள்ளன. சில வயல்வெளிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், நெல் முளைக்கும் அபாய நிலையும் உள்ளது.

தொடர்ந்து மழை பெய்வதாலும், வயல்வெளியில் ஈரப்பதம் இருப்பதாலும், நெல் அறுவடை செய்வதற்கு இயந்திரம் போக முடியாத நிலை உள்ளது. இதனால், விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்குள் அறுவடை செய்யவில்லை எனில், நெற்கதிர்கள் வயல்வெளியிலேயே தண்ணீரில் மூழ்கி வீணாகும்.

எனவே, மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என, கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us