/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
526 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
/
526 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
ADDED : ஜன 20, 2024 11:28 PM
திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், உள்ள 526 ஊராட்சிகளிலும், குடியரசு தினமான வரும், 26ல் கிராம சபை கூட்டம், காலை 11:00 மணியளவில் நடக்கிறது.
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், கொசு வாயிலாக பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் வாயிலாக, 2024- -25ம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டம், துாய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தல் வேண்டும்.
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்போர், கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

