sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நகராட்சியில் ஆடு தொட்டி அமைக்க வலியுறுத்தல்

/

நகராட்சியில் ஆடு தொட்டி அமைக்க வலியுறுத்தல்

நகராட்சியில் ஆடு தொட்டி அமைக்க வலியுறுத்தல்

நகராட்சியில் ஆடு தொட்டி அமைக்க வலியுறுத்தல்


ADDED : பிப் 11, 2024 11:22 PM

Google News

ADDED : பிப் 11, 2024 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி, : பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில், 40க்கும் அதிகமான இறைச்சி கடைகள் உள்ளன. வழக்கமாக ஆடுகளை அதற்கென உள்ள ஆடுதொட்டி நிலையத்திற்கு கொண்டு சென்று, சுகாதார ஆய்வாளரின், தகுதி சான்று பெறவேண்டும்.

பின், அங்கேயே ஆட்டை அறுத்து சுத்தம் செய்து, நகராட்சி முத்திரை பெற்று, விற்பனை செய்ய கொண்டு செல்ல வேண்டும். மேலும் இறைச்சி கழிவுகளும் அங்கேயே குவித்து வைத்து சுகாதாரமான முறையில் கையாள வேண்டும்.

ஆனால், பொன்னேரி நகராட்சியில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. இதற்கொன ஆடுதொட்டி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் ஆட்டிறைச்சி தரம் கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும், ஆட்டிறைச்சி கழிவுகள் முறையாக அப்புறப்படுத்துவதில்லை. இவை நீர்நிலைகளில் கொண்டு கொட்டப்படுகிறது. நீர்நிலைகளில் இறைச்சி கழிவுகள் கலந்து பாழாகிறது.

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே, இருந்த ஆடு தொட்டி கட்டடம், பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்கு இடித்து அகற்றப்பட்டது. அங்கு புதிய ஆடு தொட்டி கட்டடம் அமைக்கப்படாமல் உள்ளது.

நகராட்சி நிர்வாகம் ஆடுதொட்டிக்கான கட்டடம் அமைத்து, சுகாதாரமான ஆடுகளை விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், இறைச்சி கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us