sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஏரிக்கரையில் குப்பை கொட்டுவதை தடுக்க இரும்பு தடுப்பு அமைப்பு

/

ஏரிக்கரையில் குப்பை கொட்டுவதை தடுக்க இரும்பு தடுப்பு அமைப்பு

ஏரிக்கரையில் குப்பை கொட்டுவதை தடுக்க இரும்பு தடுப்பு அமைப்பு

ஏரிக்கரையில் குப்பை கொட்டுவதை தடுக்க இரும்பு தடுப்பு அமைப்பு


ADDED : செப் 18, 2025 12:17 AM

Google News

ADDED : செப் 18, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அருகே ஏரிக்கரை பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க, வாகனங்கள் உள்ளே செல்ல முடியாதபடி சாலையோரம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையோரம், கீழ்முதலம்பேடு ஏரிக்கரை அருகே, தினமும் டன் கணக்கில் குப்பை கழிவுகள் குவித்து எரிக்கப்பட்டு வந்தன. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், அருகில் உள்ள கீழ்முதலம்பேடு ஏரி நீரும் மாசடைந்தது.

ஆறு மாதங்களுக்கு முன், கீழ்முதலம்பேடு ஊராட்சி நிர்வாகம் சார்பில், அந்த இடத்தை சுத்தம் செய்து, எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.

'குப்பைகளை கொட்டினாலோ அல்லது கழிவுநீரை ஊற்றினாலோ சம்மந்தப்பட்ட நபர்கள் மீது காவல் துறையின் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், எச்சரிக்கை பலகையை மதிக்காத சில தனியார் நிறுவனங்கள், இரவு நேரத்தில் டிராக்டர்கள் வாயிலாக கழிவுகளை கொட்டி எரித்து வந்தனர். கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த முடியாததால், மீண்டும் அப்பகுதியில் குப்பை கழிவுகள் தேங்கின.

இதற்கு தீர்வு காணும் வகையில், கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாதபடி, சாலையோரம் இரும்பு சட்டங்கள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டன.

இந்த தடுப்பு முறைக்கு, கிராம மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.






      Dinamalar
      Follow us