/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோவில் குளத்தில் ஆண் சடலம் மீட்பு
/
கோவில் குளத்தில் ஆண் சடலம் மீட்பு
ADDED : மார் 25, 2025 06:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான குளத்தில், நேற்று காலை ஆண் சடலம் மிதப்பதாக, திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.