sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மொபைல் போன் திருடியவர்கள் கைது

/

மொபைல் போன் திருடியவர்கள் கைது

மொபைல் போன் திருடியவர்கள் கைது

மொபைல் போன் திருடியவர்கள் கைது


ADDED : ஜன 13, 2024 09:40 PM

Google News

ADDED : ஜன 13, 2024 09:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியபாளையம்:பெரியபாளையம் அருகே, செங்காத்தாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ராசு, 24. லாரி கிளீனராக பணியாற்றி வருகிறார். கடந்த, 9ம் தேதி மணிகண்டன் என்பவரின் லாரியில் பணியாற்றி விட்டு, அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகில், இரவு லாரியிலேயே துாங்கினார்.

இரவு, சிறுநீர் கழிக்க பெட்ரோல் பங்கில் உள்ள கழிப்பறைக்கு சென்று விட்டு லாரிக்கு திரும்பினார்.அப்போது அங்கு வைத்திருந்த மொபைல் போன் மற்றும் 2,000 ரூபாய் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து வெங்கல் போலீஸ் நிலையத்தில் சின்ராசு புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வந்தனர்.

சந்தேகத்தின் பேரில் பேட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்த யாகூப், 19, சுரேஷ், 19 ஆகிய இருவரை விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பணம், மொபைல் போன் ஆகியவற்றை திருடியதை ஒப்புக் கொண்டனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us