sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சோதனை சாவடியில் ஆய்வாளரை தாக்கிய வடமாநில ஓட்டுநர் கைது

/

சோதனை சாவடியில் ஆய்வாளரை தாக்கிய வடமாநில ஓட்டுநர் கைது

சோதனை சாவடியில் ஆய்வாளரை தாக்கிய வடமாநில ஓட்டுநர் கைது

சோதனை சாவடியில் ஆய்வாளரை தாக்கிய வடமாநில ஓட்டுநர் கைது


ADDED : செப் 17, 2025 02:03 AM

Google News

ADDED : செப் 17, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி:பூந்தமல்லி சோதனை சாவடியில், வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளரை தாக்கிய, உத்தர பிரதேச மாநில ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை- - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில், வாகன சோதனை சாவடி உள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு, வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் சந்திரன், 50, வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அவ்வழியே வந்த லாரியை மடக்கி சோதனை செய்த போது, உரிய ஆவணம் இல்லாதது தெரிய வந்தது. லாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த உ.பி.,யை சேர்ந்த லாரி ஓட்டுநர் முகமது அப்துல் சாகிப், 22, லாரியில் இருந்து கீழே இறங்கி, ஆய்வாளர் சந்திரனை தாக்கினார்.

அங்கிருந்தவர்கள் முகமது அப்துல் சாகிப்பை பிடித்து, நசரத்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us