sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலையில் திரியும் கால்நடை உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்'

/

சாலையில் திரியும் கால்நடை உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்'

சாலையில் திரியும் கால்நடை உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்'

சாலையில் திரியும் கால்நடை உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்'


ADDED : ஜூன் 13, 2025 02:26 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:சாலையில் திரியும் கால்நடை உரிமையாளர்களுக்கு ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் 'நோட்டீஸ்' வழங்கியுள்ளது.

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், சாலையில் இருபுறமும் வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர்.

கால்நடை வளர்ப்பவர்கள் வீடுகளில் அவற்றை கட்டி போட்டு தீனி போடுவதில்லை. மாறாக சாலையில் திரிய விடுகின்றனர். மாடுகள் தீனிக்காக, அங்குள்ள பழம், பூ, காய்கறி கடைகளுக்கு செல்கின்றன. அப்போது வியாபாரிகள் அவற்றை துரத்தும்போது, பயத்தில் அவை ஓடுகின்றன. இதில் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கின்றனர்.

இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம், சாலையில் திரிய விடும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கிஉள்ளது.

அதில், ஒரு வாரத்திற்குள் மாடுகளை வீடுகளில் கட்டாமல் சாலையில் திரியவிட்டால், மாடுகளை பேரூராட்சி நிர்வாகம் பிடித்து நடவடிக்கை எடுக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us