ADDED : செப் 17, 2025 10:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் வசித்தவர் பாக்யராஜ், 45. கருத்து வேறுபாடு காரணமாக, 15 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வசித்து வந்தார். நேற்று மதியம், தேர்வழி கிராமத்திற்கு உட்பட்ட தையந்தோப்பில், மதுபோதையில் இறந்து கிடந்தார்.
உடலை கைபற்றிய போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், மது போதையில், நாக்கு வறண்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

