sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசு நிலத்தை 'ஆட்டை' போட திட்டம் ஊராட்சி நிர்வாகம், மகளிர் குழு புகார்

/

அரசு நிலத்தை 'ஆட்டை' போட திட்டம் ஊராட்சி நிர்வாகம், மகளிர் குழு புகார்

அரசு நிலத்தை 'ஆட்டை' போட திட்டம் ஊராட்சி நிர்வாகம், மகளிர் குழு புகார்

அரசு நிலத்தை 'ஆட்டை' போட திட்டம் ஊராட்சி நிர்வாகம், மகளிர் குழு புகார்


ADDED : ஜூலை 02, 2025 03:04 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 03:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்,:அத்திப்பட்டு புதுநகரில், அரசுக்கு சொந்தமான, 5 சென்ட் நிலத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிக்க திட்டமிட்டு, சுற்றுச்சுவர் கட்டி வரும் நிலையில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் மகளிர் குழுவினர், பி.டி.ஓ., நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட அத்திப்பட்டு புதுநகரில், ஊராட்சிக்கு சொந்தமான சர்வே எண் - 354/12ல், 5 சென்ட் நிலம் உள்ளது.

இந்த இடத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிக்க முயற்சித்தபோது, ஊராட்சி நிர்வாகம் சார்பில் அங்கு, 'ஊராட்சிக்கு சொந்தமான இடம்' எனவும், 'வணிக வளாகத்திற்கு ஒதுக்கப்பட்டது' எனவும் அறிவிப்பு பலகை வைத்தது.

தற்போது, அந்த இடத்தில் மகளிர் குழுவினர், தேநீர் கடை நடத்தி வருகின்றனர். மூன்று நாட்களாக இந்த இடத்தை அபகரிக்கும் எண்ணத்தில் தனிநபர்கள் சிலர், அங்கு சுற்றுச்சுவர் கட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அத்திப்பட்டு ஊராட்சி நிர்வாகம் மற்றும் மகளிர் குழு சார்பில், மீஞ்சூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

தற்போது சந்தை மதிப்பில், இந்த இடம் 50 லட்சம் ரூபாய் வரை விலைபோகும் என்பதால், தனிநபர்கள் இதை அபகரிக்க திட்டமிட்டு உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதான சாலையில் நடைபெறும் ஆக்கிரமிப்பு முயற்சியை அதிகாரிகள் தடுப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதவாக செயல்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, அரசு நிலத்தை மீட்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us