/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புயலால் சாய்ந்த மின்கம்பம்: அதிகாரிகள் அலட்சியம்
/
புயலால் சாய்ந்த மின்கம்பம்: அதிகாரிகள் அலட்சியம்
ADDED : ஜன 18, 2024 10:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் தொடுகாடு ஊராட்சிக்கு உட்பட்ட பராசங்குபுரம் பகுதியிலிருந்த நமச்சிவாயபுரம் செல்லும் கிராம சாலை உள்ளது.
இந்த சாலையோரம் உள்ள மின்கம்பம், கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயலில் சேதமடைந்தது. இந்த மின்கம்பத்தை சீரமைக்க கோரி பலமுறை புகார் அளித்தும் சீரமைக்கவில்லை என, இப்பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, புயலால் சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

