sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நெடுஞ்சாலையில் இணைப்பு சாலை அமைக்க தனியார் கட்டடம் அகற்றம்

/

நெடுஞ்சாலையில் இணைப்பு சாலை அமைக்க தனியார் கட்டடம் அகற்றம்

நெடுஞ்சாலையில் இணைப்பு சாலை அமைக்க தனியார் கட்டடம் அகற்றம்

நெடுஞ்சாலையில் இணைப்பு சாலை அமைக்க தனியார் கட்டடம் அகற்றம்


ADDED : செப் 11, 2025 03:17 AM

Google News

ADDED : செப் 11, 2025 03:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருப்பதி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் அருகே இணைப்பு சாலை அமைக்க, அருகிலிருந்த தனியார் கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம், சென்னை பாடி - ரேணிகுண்டா வரை, 124 கி.மீ., ஆறுவழிச்சாலையாக மாற்றும் பணி, 2011ம் ஆண்டு துவங்கியது.

அப்போது, சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரையும், ஆந்திர மாநிலம், புத்துார் - ரேணிகுண்டா வரையும், நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது.

நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து, திருநின்றவூர் வரை இணைப்பு பணி, ஏழு ஆண்டுகளாக முடங்கியது.

இந்த நிலையில், திருவள்ளூர் - திருநின்றவூர் வரை, 17.5 கி.மீ.,க்கு தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணி, 364 கோடி ரூபாய் மதிப்பில், 2023ல் துவக்கப்பட்டு, பணி நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் பணி முடியும் வகையில், சாலை அமைக்கும் பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து, தேசிய நெடுஞ்சாலையில், சர்வீஸ் சாலை அமைக்க, அங்கிருந்த இரண்டடுக்கு கட்டடம் நேற்று அகற்றப்பட்டது. கட்டடம் முழுதும் இடித்து அகற்றிய பின், சர்வீஸ் சாலை அமைக்கும் பணி துவங்க உள்ளது.






      Dinamalar
      Follow us
      Arattai