sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மதுக்கடையை திறக்க விடாமல் ஆரணியில் போராட்டம்

/

மதுக்கடையை திறக்க விடாமல் ஆரணியில் போராட்டம்

மதுக்கடையை திறக்க விடாமல் ஆரணியில் போராட்டம்

மதுக்கடையை திறக்க விடாமல் ஆரணியில் போராட்டம்


ADDED : ஜன 21, 2024 12:28 AM

Google News

ADDED : ஜன 21, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி : ஆரணி கடைவீதி அருகே கம்மாள தெருவில், அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. பல வகையில் பகுதி மக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த அந்த கடையை அகற்ற வலியுறுத்தி பல ஆண்டு காலமாக போராடி வருகின்றனர்.

கடை இடம் மாற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், கடைக்கு அருகே குடிமையம் திறக்கப்பட்டதால், அதிகாலை முதல் நள்ளிரவு வரை சரக்கு விற்பனை கனஜோராக நடந்து வருகிறது.

பொறுமை இழுந்த ஆரணி மக்கள், 200 பேர் ஒன்று கூடி, நேற்று அந்த கடையை திறக்கவிடாமல் முற்றுகையிட்டு கடை முன் போராட்டம் மேற்கொண்டனர்.

தகவல் அறிந்து சென்ற பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், மக்களிடம் சமாதானம் பேசினார். கடையை மூட வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்ததால் 36 பெண்கள் உட்பட, 71 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள சமுதாய கூடத்தில் அடைத்தனர். காஞ்சனா என்ற பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அவருக்கு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தமயந்தி வந்து பேச்சு நடத்தினார். கடை அகற்றப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us