/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரேஷன் கார்டில் திருத்தம் நாளை சிறப்பு முகாம்
/
ரேஷன் கார்டில் திருத்தம் நாளை சிறப்பு முகாம்
ADDED : ஜன 18, 2024 10:28 PM
திருவள்ளூர்:ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட திருத்தம் மேற்கொள்ள, நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிகளில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மேற்கொள்ள சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.
மேலும், பெறப்படும் மனுக்களின் விபரம், அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள், இணையத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

