sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

விரைவு ரயில்கள் நின்று செல்ல வட மாநிலத்தவர்கள் கோரிக்கை

/

விரைவு ரயில்கள் நின்று செல்ல வட மாநிலத்தவர்கள் கோரிக்கை

விரைவு ரயில்கள் நின்று செல்ல வட மாநிலத்தவர்கள் கோரிக்கை

விரைவு ரயில்கள் நின்று செல்ல வட மாநிலத்தவர்கள் கோரிக்கை


ADDED : ஜன 18, 2024 10:13 PM

Google News

ADDED : ஜன 18, 2024 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில், வடமாநிலங்களை இணைக்கும் முக்கிய ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வடமாநில தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம், புறநகர் மின்சார ரயில்களின் முனையமாக உள்ளது. மேலும், இந்திய ரயில்வேயின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 25 கோடி ரூபாய் செலவில், கும்மிடிப் பூண்டி ரயில் நிலையத்தை நவீன மயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றனர். அவற்றில், பீஹார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

அவர்களில் பலர், குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அந்த தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு செல்ல வேண்டுமெனில், தங்கள் உடமைகளுடன், 45 கி.மீ., தொலைவில் உள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்ல வேண்டும்.

அவர்கள், சென்னை சென்ட்ரலில் ஏறும் விரைவு ரயில்களும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் வழியாக தான் செல்கின்றன. தற்போது, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் சர்க்கார் விரைவு ரயில் மட்டுமே நின்று செல்கிறது.

கும்மிடிப்பூண்டி மார்க்கமாக வடமாநிலங்களை இணைக்கும் முக்கிய விரைவு ரயில்கள் மட்டும், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நின்று சென்றால், வடமாநில தொழிலாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலும் தவிர்க்க முடியும். அனைத்து நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தபடும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வடமாநில தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us