sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி சர்க்கரை ஆலை பொதுப்பேரவை கூட்டம்

/

திருத்தணி சர்க்கரை ஆலை பொதுப்பேரவை கூட்டம்

திருத்தணி சர்க்கரை ஆலை பொதுப்பேரவை கூட்டம்

திருத்தணி சர்க்கரை ஆலை பொதுப்பேரவை கூட்டம்


ADDED : ஜன 13, 2024 09:26 PM

Google News

ADDED : ஜன 13, 2024 09:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை திருவாலங்காடில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில், 2023-- 24ம் ஆண்டுக்கான கரும்பு அரவை நடைபெற்று வருகிறது.

ஆண்டுதோறும் ஆலையின் வரவு செலவு கணக்கை பொதுப்பேரவை கூட்டம் நடத்தி ஒப்புதல் பெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று ஆலை மேலாண்மை இயக்குனர் மலர்விழி தலைமையில் பொதுப்பேரவை கூட்டம் நடந்தது. இதில் 2023- -24 மற்றும் 2024 - - 25ம் ஆண்டுகளுக்கான வரவு --செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் பங்குதாரர்கள், கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலை ஊழியர்கள் பங்கேற்றனர்.

பின் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் ஆலையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மனு அளித்தனர்.

கரும்பு விவசாயிகள் கூறுகையில், 'ஆலையை மேம்படுத்த வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் விளையும் 5 லட்சத்து 50 ஆயிரம் டன் கரும்பை ஆலையில் அரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'ஆலையில் உள்ள காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும். இதனால் இளைஞர்கள் பயன்பெறுவர்' என்றனர்.






      Dinamalar
      Follow us