/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாலிபர் கொலை வழக்கில் இருவர் கைது
/
வாலிபர் கொலை வழக்கில் இருவர் கைது
ADDED : ஜன 24, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பரத்மாலிக், 28. கும்மிடிப்பூண்டி, பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்த படி, சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தனர்.
இம்மாதம், 14ம் தேதி இரவு, தங்கியிருந்த அறையில், பரத்மாலிக், கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடன் வசித்து வந்த, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பித்துரமாலிக், 25, சத்தியதத் மாலிக், 22, ஆகியோர் குடிபோதை தகராறில், பரத்மாலிக்கை கொலை செய்தது தெரிந்தது.
வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், ஒடிசா தப்பி சென்ற இருவரையும், தனிப்படை அமைத்து கைது செய்தனர்.

