Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தக்காளி வரத்து குறைந்தும் விலை உயரவில்லை

தக்காளி வரத்து குறைந்தும் விலை உயரவில்லை

தக்காளி வரத்து குறைந்தும் விலை உயரவில்லை


ADDED : மே 01, 2024 12:27 AM

Follow on Google

ADDED : மே 01, 2024 12:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை;பருவ மழைகள் ஏமாற்றி வருவதால், உடுமலை சுற்றுப்பகுதிகளில் கடும் வறட்சி நிலை காணப்படுகிறது.

இதனால், தக்காளி சாகுபடி பெருமளவு குறைந்துள்ளது. கிணற்று நீரை ஆதாரமாகக்கொண்டு, ஒரு சில பகுதிகளில் மட்டும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கடுமையாக வெயில் காரணமாக, தக்காளி செடிகள் பாதித்தும், காய்கள் சிறுத்தும், மகசூல் பெருமளவு குறைந்துள்ளது.

இதனால், உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இருப்பினும், விலை உயராததால், விவசாயிகள் பாதித்துள்ளனர். நேற்று, 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி, 250 முதல், 350 மட்டுமே விற்று வருகிறது.

விவசாயிகள் கூறியதாவது: வரத்து குறைவு காரணமாக, கூடுதல் விலை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், தரமற்ற பழங்கள், வெயிலுக்கு தாங்காதது உள்ளிட்ட காரணங்களினால், வெளி மாவட்ட வியாபாரிகள் வரத்து குறைந்துள்ளது.

உள்ளூர் வியாபாரிகள் மட்டும் கொள்முதல் செய்வதால், விலை உயராமல் உள்ளது. கடுமையான வறட்சி, நீர்ப்பற்றாக்குறையிலும், தக்காளி சாகுபடி செய்தும், விலையில்லாததால் நஷ்டமே ஏற்படுகிறது.

இவ்வாறு, தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap