sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோவில் சொத்து மீட்க கிராம மக்கள் வேண்டுகோள்

/

கோவில் சொத்து மீட்க கிராம மக்கள் வேண்டுகோள்

கோவில் சொத்து மீட்க கிராம மக்கள் வேண்டுகோள்

கோவில் சொத்து மீட்க கிராம மக்கள் வேண்டுகோள்


ADDED : ஜூலை 29, 2024 11:10 PM

Google News

ADDED : ஜூலை 29, 2024 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில், பொட்டிக்காம்பாளையம் கரியகாளியம்மன் கோவில் வழிபாட்டுக்குழுவினர், அளித்த மனு:

தாராபுரம் தாலுகா, முண்டுவேலம்பட்டி கிராமம், பல்லாக்கோவிலில், 300 ஆண்டு பழமையான கரியகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், தனியார் ஒருவர், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், முறைகேடாக நிதி வசூலித்துவருகிறார். பக்தர்களிடமிருந்து இதுவரை 15 கோடி ரூபாயை காணிக்கையாக பெற்று, அதில், 9 கோடி ரூபாயை மட்டும் கோவிலுக்காக செலவிட்டுள்ளனர்; மீதி தொகையை, சிலர் கூட்டாக பங்கிட்டுள்ளனர்.

கோவிலில் வசூலித்த பணத்தில், கோவில் எதிரே உள்ள நிலத்தை விலைக்கு வாங்கியுள்ளார். கோவிலுக்கு சொந்தமான இடத்திலுள்ள தென்னை மரங்களை வெட்டினார். இது தொடர்பாக குண்டடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, கோவிலுக்கு சொந்தமான நிதி மற்றும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட தனியார் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் சொத்துக்களையும் மீட்க வேண்டும்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

---

பொட்டிக்காம்பாளையம், கரிய காளியம்மன் கோவில் நிலம், நககைளை மீட்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க திரண்ட பக்தர்கள்.






      Dinamalar
      Follow us