sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மகோகனி மரங்களால் பசுமையாகும் விவசாய நிலங்கள்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் தீவிரம்

/

மகோகனி மரங்களால் பசுமையாகும் விவசாய நிலங்கள்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் தீவிரம்

மகோகனி மரங்களால் பசுமையாகும் விவசாய நிலங்கள்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் தீவிரம்

மகோகனி மரங்களால் பசுமையாகும் விவசாய நிலங்கள்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் தீவிரம்


ADDED : செப் 17, 2025 08:54 PM

Google News

ADDED : செப் 17, 2025 08:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; வனத்துக்குள் திருப்பூர் -திட்டத்தின் கீழ், உடுமலை பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு தீவிரமடைந்துள்ளது.

வனத்துக்குள் திருப்பூர் - 11 திட்டத்தின் கீழ், 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

உடுமலை பகுதிகளில், விவசாயிகள், தொழில் நிறுவன உரிமையாளர்கள் ஆர்வம் காரணமாக, 85 ஆயிரம் மரக்கன்றுகள் வரை நடவு செய்யப்பட்டுள்ளது. பசுமை வளர்க்கும் பணியில், விவசாயிகள் மரச்சாகுபடி திட்டமாக, மரக்கன்றுகள் நடவு செய்து வளர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதன் அடிப்படையில், எலையமுத்துார் ஆறுமுகம் - நீலாவதிக்கு சொந்தமான விவசாய நிலத்தில், 350 மகோகனி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

மகோகனி மரங்கள் எளிதாக வளர்க்கக்கூடியவை, விவசாயிகளுக்கு அதிக வருவாய் ஈட்ட உதவுவதோடு, இம்மரம் தடிமரம், ஒட்டு பலகை போன்ற பல்வேறு பயன்பாடுகளை கொண்டதாகவும் உள்ளது.

மேலும், சூழல் காப்பதிலும் இம்மரங்கள் மிகச்சிறந்ததாகும். மகோகனி மரங்கள் வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, காலநிலை மாற்றத்தை தணிக்க உதவுகின்றன.

இதனால், இத்திட்டத்தின் கீழ் மகோகனி மரக்கன்றுகள் நடவு செய்ய விவசாயிகள் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதே போல், முக்கோணம் விவசாயி சேதுவுக்கு சொந்தமான நிலத்தில், 480 மகோகனி, ஒரு புன்னை என, 481 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மேலும், பெரிசனம்பட்டியிலுள்ள அமராவதி பிரீடர் பார்ம்ஸ் நிறுவனத்தில், கோழிப்பண்ணை வளாகத்தை சுற்றிலும், மஞ்சள் வாகை, 30, புங்கன், 100, சொர்க்கம், 30, மகோகனி, 220, இலுப்பை, 5 என, 385 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

அதே போல், மடத்துக்குளம் சாளரப்பட்டியில், பூரணிக்கு சொந்தமான கோழிப்பண்ணை வளாகத்தில், 70 மகோகனி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

கோழிப்பண்ணை வளாகங்களில், பசுமை மற்றும் குளிர் சீதோஷ்ண நிலையை பராமரிக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் காக்கும் வகையிலும், கோழிப்பண்ணை வளாகங்களில் அதிகளவு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், கோழிப்பண்ணை, தொழிற்சாலை வளாகங்கள், பள்ளி, கல்லுாரி, கோவில் வளாகங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்களில், இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்து, பராமரித்து மரமாக வளர்ந்து பசுமை பரப்பை அதிகரிக்கும் பணியில் ஆர்வம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us