/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வில்லிபாரத தொடர் சொற்பொழிவு நிறைவு
/
வில்லிபாரத தொடர் சொற்பொழிவு நிறைவு
ADDED : ஜன 13, 2024 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;அவிநாசியில் ஒரு மாதம் நடைபெற்ற வில்லிபாரதம் தொடர் சொற்பொழிவு நேற்றுடன் நிறைவு பெற்றது.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் உபகோவிலான ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடத்தில் கடந்த டிச., 17ம் தேதி முதல் திருச்சி கல்யாணராமனின் வில்லி பாரத தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகளும், திருப்பாவை உபன்யாசம் உஞ்சவிருத்தி ஆகியவையும் நடந்தன
நேற்று நிறைவு நாளில் கர்ணன் மோட்சம் மற்றும் தர்மர் பட்டாபிஷேக நிகழ்ச்சிகள் நடந்தன.
ஏற்பாடுகளை ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்த பேரவையினர் செய்திருந்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

